



முன்னுரை
நம் நாட்டில் தமிழ்மொழியைத் தொடர்ந்து வாழும் மொழியாக நிலைபெறச் செய்வதே ஆசிரியர்களாகிய எங்களது இலக்காகும். இதனை அடைவதற்குச் சமூகத்திலும் இல்லங்களிலும் நிலவும் மொழிச்சூழலுக்குத் தக்கவாறு மாணவர்களுக்குப் பள்ளிகளில் பாடங்களைக் கற்றுத் தருகிறோம்.
எங்கள் பள்ளியில் செங்ஹுவா பூங்கா (Zhenghua Garden) என்று தமிழுக்காகவே ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இத்தளத்தில் மாணவர்களின் படைப்புகள், போட்டிகளில் பங்கேடுத்த விவரங்கள், காணொளிகள் வகுப்பறைகளில் நடைபெறும் நடவடிக்கைகள், கற்றல் பயணங்கள் போன்ற தகவல்களைப் பதிவேற்றம் செய்துள்ளோம்.
தமிழைத் தேர்வுப்பாடமாக மட்டுமே கற்பிக்காமல் மகிழ்வூட்டும் வகுப்பறைச் சூழலில் உயிரோட்டம் நிறைந்த பாடமாகக் கற்பிக்க கற்றல் நடவடிக்கைகளை அமைத்துள்ளோம். அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள்.
திருமதி தனுஜா ராஜ்
வழிகாட்டு ஆசிரியர்